கர்நாடக டூ அந்தியூர் பர்கூர்... மோட்டார் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது

கர்நாடக மாநிலத்தில் இருந்து, அந்தியூர் பர்கூருக்கு மோட்டார் பைக்கில், கஞ்சா கடத்திய இருவரை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-24 04:00 GMT

பைக்கில் கஞ்சா கடத்தி, போலீசாரிடம் பிடிபட்ட இருவர் மற்றும் அவர்களது பைக். 

ஈரோடு  மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள தமிழகம் - கர்நாடக எல்லைப்பகுதியான கர்கேகண்டி சோதனைச்சாவடியில் பர்கூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக  மோட்டார் பைக்கில் வந்த இருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், பைக்கை நிறுத்தாமல் சென்ற அவர்களை, போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில், மோட்டார் பைக்கில் 850 கிராம் அளவுள்ள கஞ்சாவை பதுக்கி, கர்நாடகாவில் இருந்து பர்கூருக்கு விற்பனைக்காக கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. கஞ்சா கடத்தி வந்த பர்கூர் பகுதியை சேர்ந்த மாதேவன் (52), சின்னப்பி (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களிடம் இருந்து 850 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News