சத்தியமங்கலம் : உச்சம் தொட்ட மல்லிகை பூ..!அதிர்ச்சியில் மக்கள்
சத்தியமங்கலத்தில் உச்சத்தை தொட்டது மல்லிகை பூவின் விலை.;
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது.
விவசாயிகள் ஏராளமான பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்
இந்த ஏலத்திற்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
பூக்களின் நிலவரம் மற்றும் விலை (ரூபாய்/கிலோ)
மல்லிகை - ரூ.1800 -ரூ. 2880
முல்லை - ரூ.1275 - ரூ.1465
காக்கடா -ரூ. 500 - ரூ.600
செண்டு - ரூ.16 - ரூ.62
கோழி கொண்டை - ரூ.15 - ரூ.110
ஜாதி முல்லை - ரூ.750
கனகாம்பரம் - ரூ.610 - ரூ.700
அரளி - ரூ.100
துளசி - ரூ.40
செவ்வந்தி - ரூ.180