சித்தோடு அருகே லாரியில் 630 கிலோ மசாலா பொருட்கள் திருடிய 4 பேர் கைது

சித்தோடு அருகே லாரியில் 630 கிலோ மசாலா பொருட்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-16 06:00 GMT

கைது செய்யப்பட்ட 4 பேர்.

சித்தோடு அருகே லாரியில், மசாலா பொருட்கள் திருடிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, பெரிய சேமூர், ஈ.பி.பி., நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 61). லாரி ஆபீஸ் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் இருந்து லாரியில் பெங்களூருவுக்கு வழக்கமாக மசாலா பொருட்கள் கொண்டு செல்கின்றனர். கடந்த மாதம் 9-ம் தேதி மசாலா பாக்கெட் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. சித்தோடு சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சாப்பிட சென்றார். திரும்பி வந்த போது லாரியின் பின்புற தார்ப்பாய் கிழிக்கப்பட்டு, 630 கிலோ மசாலா பாக்கெட் திருட்டு போனது தெரிந்தது. அதன் மதிப்பு, 1.40 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.இதில் மசாலா பொருட்களை திருடியது 4 பேர் என தெரிய வந்தது.மதுரை, நாகமலை பகுதியை சேர்ந்த பிரசாத் (37), உசிலம்பட்டி, ஏ.கொக்குளம் பகுதியை சேர்ந்த பாரதி (31), மதுரை, திருமங்கலம் பகுதியை சேர்ந்த ரூபன் (24), மதுரை, நாகமலை பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (49) ஆகியோரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர். பின்னர், நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். நெடுஞ்சாலைகளில் மெதுவாக செல்லும் லாரிகளில் ஏறி, பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டவர்கள் என்று தெரிவித்தனர். இதில் பிரசாத் மீது, 18 வழக்குகள், பாரதி மீது மூன்று வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News