ஈரோட்டில் சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-22 01:45 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெற்றிசெல்வி தலைமை தாங்கினார். செயலாளர் வித்யாதேவி, பொருளாளர் தவ்லத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை, வருவாய் துறையிடம் ஒப்படைத்து, கிராம சுகாதார நர்சுகள் மேற்கொள்ளும் தாய்சேய் நலப்பணி, தடுப்பூசி பணி, குடும்ப நலப்பணிகளை மட்டும் செயல்படுத்த உத்தரவிட வேண்டும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் செய்யக்கூடிய பணிகளை, நர்சுகள் செய்ய நிர்பந்திக்கவும், மிரட்டவும் கூடாது.

செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செவிலியர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News