99.29 அடியாக குறைந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 741 கன அடியாக உள்ளது.

Update: 2023-02-02 05:15 GMT

Erode news, Erode news today- பவானிசாகர் அணை.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு ஆதாரங்களாக விளங்குகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேலும், அணையில் இருந்து இரண்டாம் போக புஞ்சை பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்

நீர் மட்டம் - 99.29 அடி ,

நீர் இருப்பு - 28.17 டிஎம்சி , 

நீர் வரத்து வினாடிக்கு - 741 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர்வரத்து 1,358 கன அடி),

நீர் வெளியேற்றம் - 2,950 கன அடி , 

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 1800 கன அடி நீரும்,  தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1,000 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி நீரும் என மொத்தம் 2,950 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News