ஈரோட்டில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

Farmer Producer Organization- ஈரோட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது

Update: 2022-07-20 06:30 GMT

மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டத்தில்  பேசுகிறார் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

Farmer Producer Organization- ஈரோட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி  மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கலந்தாய்வு கூட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு  உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்து பேசினர்.

இதைத் தொடர்ந்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மற்றும் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனத்திற்கும் 1.23 கோடி ரூபாய் மதிப்பிலான மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News