ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் தலை தூக்கும் கொரோனா: இன்று 31 பேர் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2022-07-03 14:00 GMT

பைல் படம்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தவர்களில் இன்று 11 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

மருத்துவமனையில் தற்போது 151 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News