ஈரோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
Erode news- ஈரோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.;
- மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள்.
Erode news, Erode news today- ஈரோட்டில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக செயல்படும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4-ஜி மற்றும் 5- ஜி அலைவரிசையை உடனடியாக வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க வேண்டும்.
ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு டெலிபோன் பவன் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துக்கு தேசிய தொலைதொடர்பு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலு முன்னிலை வகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.