தர்மபுரி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

தர்மபுரி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ததில் மர்மம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-21 09:00 GMT

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள். 

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலூகா வெங்காயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகள் வனிதா( எ) பவித்ரா வயது 24. பி.இ.பட்டதாரி. இவருக்கும் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மலையப்பன்நகர் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த  மகன் மாணிக்கவாசகம் வயது 30. ராணுவ வீரரான இவருக்கும் கடந்த ஏப்ரல் 25 ந்தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று மாலை வனிதாவின் தாய் மாதம்மாள் மலையப்ப நகருக்கு வந்து தனது மகளை பார்த்து விட்டு திரும்பியுள்ளார். இதனையடுத்து இன்று காலை பாத்ரூமிற்கு சென்ற வனிதா துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தர்மபுரி அடுத்த பாளையம் புதூர் டோல்கேட் அருகே பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஆம்புலன்ஸ்சை விடாமல் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொப்பூர் போலீசார் பெண் வீட்டாரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து கலைந்து சென்றனர். பின்னர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு மாணிக்கவாசகம் மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி முற்றுகையில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் தர்மபுரி நகரில் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags:    

Similar News