குரும்பட்டியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

குரும்பட்டி பகுதியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2021-11-10 05:30 GMT

குரும்பட்டி பகுதியில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை, ஏ. கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பூர் ஊராட்சி,  பெரிய குரும்பட்டி பகுதியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில்,  கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த முகாமில்,  100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு,  தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம். ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, கூட்டுறவு சங்க துணை தலைவர் வெற்றிவேல், கட்சி நிர்வாகிகள் மனோகரன், மாதையன், மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News