பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தருமபுரியில் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-29 14:15 GMT

தர்மபுரியில்,  பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப்பெற கோரி,  வி.சி.கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர்

கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. பெட்ரோல் விலையை உயர்த்துவதையும், வரி அதிகரிப்பையும் கண்டித்து தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பாக இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே விலையை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கண்டன முழக்கங்கள் எழுப்பினர். முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு உள்ளிட்ட இடது சாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். 

இதேபோல், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விசிக, இடதுசாரி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News