தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாப சாவு
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கெங்கலாபுரத்தை சேர்ந்தவர் அபிமன்னன் வயது 60. கூலி தொழிலாளி. இவரின் வீட்டின் அருகே புளிய மரம் உள்ளது.இதில் குரங்குகள் தொல்லையால் புளிய மரத்தின் மேல் ஏறி கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும், ஐஸ்வர்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.