குற்றவாளிகளை மறைத்ததாக கடத்தூர் ஒன்றிய பா.ம.க. துணை சேர்மன் உள்ளிட்ட இருவர் கைது

கொலை குற்றவாளிகளளை மறைத்து வைத்திருந்தாக கடத்தூர் ஒன்றிய பா.ம.க. துணை சேர்மன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-10-14 02:29 GMT

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த முத்தனூரை சேர்ந்தவர் லோகிதாஸ்( எ) முனியப்பன், வயது.27. இவர் கடந்த ஜனவரி 16 ந் தேதி கடத்தூரில் கரும்பு வியாபாரம் செய்து விட்டு தனது பைக்கில் முத்தனூருக்கு சென்றார்.அப்போது எதிரே கார் மோதுவது போல் வந்தது.

இதில் முனியப்பனுக்கும் காரில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. காரில் வந்தவர்கள் தாக்கியதில் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் முனியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் படி கடத்தூர் போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.

அப்போது குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தோடு அவர்களை மறைத்து வைத்திருந்தாக சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கடத்தூர் ஒன்றிய பா.ம.க துணை சேர்மனும், வெங்கடதாரஹள்ளியை சேர்ந்த சக்திவேல்,வயது 47., முத்தனூரை சேர்ந்த மாரியப்பன்வயது ,34., ஆகிய இருவரையும் நேற்று கடத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News