தர்மபுரி: உயிரிழந்த ஊர்க்காவல்படை வீரர்கள் குடும்பத்திற்கு எஸ்.பி. நிதியுதவி
தர்மபுரி மாவட்டத்தில் உயிரிழந்த ஊர்க்காவல்படை வீரர்கள் குடும்பத்திற்கு, எஸ்.பி.கலைசெல்வன் நிதி உதவி வழங்கினார்.
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் ஊர்க்காவல் படைப்பிரிவில் பணிபுரிந்த தேவக்குமார் என்பவர், மஞ்சள்காமலை நோய் ஏற்பட்டு காலமானார். ம.மாதேஸ்வரன் என்பவர், கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இவர்கள் இருவரின் குடும்பத்தாரிடம், ஊர்க்காவல் படையின் வட்டார படைத்தளபதி ஜெ.ஏ.தண்டபாணி, தனது சொந்தப்பணத்தில் இருந்து ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 75,000 காசோலையாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.கலைச்செல்வன் முன்னிலையில், இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஊர்க்காவல் பிரிவின் துணை வட்டார தளபதி வி.சீனிவாசன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் வி.சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.