மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் துவக்கி வைப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் திவ்யதர்சினி, கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2021-10-14 00:30 GMT

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.திவ்யதர்சினி, கொடியசைத்து துவக்கி வைத்தார்

தருமபுரி மாவட்டத்தில்,  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி,  எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை நீரை முழுவதுமாக சேகரித்து,  நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும்,  குடிநீர் தரத்தை மேம்படுத்தவும் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தினை தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் கே.பாபு, நிர்வாக பொறியாளர்கள் கே.சேகர், எஸ்.சங்கரன், உதவி நிர்வாக பொறியாளர் ஆர்.பாஸ்கரன், துணை நிலநீர் வல்லுநர் எஸ்.கல்யாணராமன் மற்றும் உதவி பொறியாளர் ஆர்.ரகோத்சிங் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News