குடும்பத்தகராறு காரணமாக மனைவி கொலை கணவரை போலீஸார் கைது செய்தனர்

கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு விஜயா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து தாய்வீட்டில் இருந்தார்

Update: 2022-03-26 05:45 GMT

தருமபுரி நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதுாரில், மனைவியை இரும்பு கம்பியால்  தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அடுத்த பாளையம்புதுரை சேர்ந்தவர் முருகன்(37;) கூலித் தொழிலாளியான இவருக்கும், இதேபகுதியை சேர்ந்த விஜயா( 32,) என்பவருக்கும் கடந்த, 10 ஆண்டுக ளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விஜயா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, இண்டூர் அடுத்த கும்பளப் பாடியிலுள்ள தாய்வீட்டு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் கும்பளப்பாடி சென்ற முருகன் மனைவி விஜயாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகன், அருகில் இருந்த இரும்பு கம்பியால்  மனைவி விஜயாவை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்தார்.  இது குறித்து நல்லம்பள்ளி போலீசார் முருகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News