தூய்மைப்பணியாளர்களுக்கு மளிகைப்பொருள்: தருமபுரி எம்.எல்.ஏ. வழங்கினார்
தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், சாமிசெட்டிப்பட்டியில் தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தூய்மை பணியாளர்களின் பங்கு மிகப்பெரியது. தங்களது உயிர்களை பற்றி கவலைப்படாமல் பொதுமக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அனைத்து இடங்களையும் தூய்மைப்படுத்தி, கடுமையாக உழைக்கின்றனர்.
தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் தூய்மைப்பணியாளர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அவ்வகையில், தருமபுரி பாமக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இன்று சாமிசெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.