சேவல் சண்டை நடத்த அனுமதிக்ககோரி தர்மபுரி எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு

வெற்றுகால் சேவல் சண்டை நடத்த அனுமதி வேண்டி தர்மபுரி எம்எல்ஏ., எஸ்.பி.வெங்கடேஸ்வரனிடம் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2022-01-18 12:00 GMT

தர்மபுரி பாமக நகர செயலாளர் வே.சத்தியமூர்த்தி தலைமையில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனிடம் மனு அளித்தனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான வெற்றுகால் சேவல் சண்டையை சில மாவட்டங்களில் நடத்திக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதன் அடிப்படையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி பாமக நகர செயலாளர் வே.சத்தியமூர்த்தி தலைமையில் தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை போன்ற வெற்றுகால் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி வெங்கடேஸ்வரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தருமபுரி வள்ளல் அதியமான் வெற்றுக்கால் சேவல் வளர்ப்போர் சங்கம், வேல் பால் டிப்போ அணி மற்றும் மர மில் அணி ஆகிய அணிகளின் சார்பிலும் இந்த மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News