புதிய தொழிற்பள்ளிகள்- அங்கீகார நீட்டிப்பு: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் / அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்க விண்ணப்பிக்கலாம்

Update: 2022-03-02 04:45 GMT

தருமபுரி  மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி

புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் / அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்  என மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி  வெளியிட்ட தகவல்:தர்மபுரி மாவட்டத்தில் 2022 - 2023 -ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் / அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 01.01.2021 முதல் 30.04.2022 நள்ளிரவு 11.59 மணி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் மற்றும் சேலத்தில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும் விவரங்களை பெறலாம்.சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 0427 2900142.மின்னஞ்சல் முகவரி ridtslm@gmail.com  என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News