தொப்பையாறு அணையில் எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் ஆய்வு
தர்மபுரி அருகே தொப்பையாறு அணையை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி அருகே தொப்பையாறு அணையை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் நீர்வரத்து உள்ளதால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரானது தங்குதடையின்றி விவசாய பெருமக்கள் பயன் பெறுகின்ற வகையில் அணையின் வலது, இடது புற நீர்வரத்து பாசன கால்வாய்கள் தூர்வாரும் பணியை உடனடியாக மேற்கொள்ள உடனிருந்த உதவி செயற்பொறியாளர் மாலதி அவர்களிடத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இரா.தயாளன், ஒன்றிய செயலாளர் ராஜீவ் காந்தி, ரத்தினம்,வெங்கடாசலம், சதீஷ், ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.