தொப்பூர் கணவாயில் பைக் - லாரி மோதல்: 3 பேர் பலி, 3 பேர் படுகாயம்

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் பைக் மீது லாரி மோதியதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

Update: 2021-06-17 12:26 GMT

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா வேப்பமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் சாமிநாதன் வயது 32, ஊமையன் மகன் செல்வராஜ் வயது 37.நாகராஜன் மகன் ஈஸ்வரன் 35, செங்கோடன் மகன் ராஜி 40, ஆகிய நான்கு பேரும் இன்று, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த பாளையம்புதூர் சனி சந்தையல் பகுதி டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில் வாங்குவதற்காக பைக்கில் வந்துள்ளனர்.

மது பாட்டில்கள் வாங்கி பைகளில் வைத்துக்கொண்டு, நான்கு பேரும்  சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் இரண்டு பைக்குகளில், தொப்பூர் கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, தர்மபுரியில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி,  பிரேக் பிடிக்காமல் முன்னே சென்ற பைக் மீது மோதியது.

இதில் சாமிநாதன், செல்வராஜ், ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த ராஜி கவலைக்கிடமான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். லாரி டிரைவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் ஜெகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தரும்புரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தர்மபுரி சேலம்- சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News