ஆடிப்பெருக்கு: தர்மபுரி மாவட்டத்திற்கு வரும் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் வரும் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-30 06:15 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆடி 18 ஆம் (03.08.2021) தேதி செவ்வாய்க்கிழமை, தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில், வரும் 07.08.2021 (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு,  குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ச. திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News