சுதந்திர தின சைக்கிள் பேரணி: எஸ்.பி. கலைச்செல்வன் துவக்கி வைப்பு

தர்மபுரியில் இருந்து புறப்பட்டு செல்லும் சி.ஆர்.பி.எப். வீரர்களின் சுதந்திர தின சைக்கிள் பேரணியை எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-31 07:00 GMT

தர்மபுரியில் இருந்து புறப்பட்டு செல்லும் சி.ஆர்.பி.எப். வீரர்களின் சுதந்திர தின சைக்கிள் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் 'ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்' என்ற தலைப்பில் மத்திய பாதுகாப்புப் படை (சி.ஆர்.பி.எப்) சார்பில் 15 வீரர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து 22.08.2021 அன்று டெல்லிக்கு புறப்பட்டது.

தமிழகத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் வாழ்ந்த திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சைக்கிள் பேரணி கர்நாடகா செல்கிறது. அங்கிருந்து ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் வழியாக 2,850 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 15 வீரர்களும் காந்தி ஜெயந்தி தினமான அக்.2-ம் தேதி டெல்லி ராஜ்காட்டை சென்றடைகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து டெல்லியை நோக்கி தொடங்கிய இப்பேரணியானது நேற்று (30.08.2021) பிற்பகலில் தருமபுரி மாவட்டத்திற்கு வந்தடைந்தது. இதனையொட்டி இச்சைக்கிள் பேரணியினை வரவேற்கும் நிகழ்ச்சி தருமபுரி, பென்னாகரம் சாலையில் உள்ள விஜய்‌ வித்யாலயா பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு சைக்கிள் பேரணியினை வரவேற்றார். மேலும் சைக்கிள் பேரணியை கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தி வரவேற்றனர்.அதேபோன்று சைக்கிள் பேரணி இன்று காலை தர்மபுரியில் இருந்து புறப்பட்டது இதனை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News