செயல்படாத 1912 புகார் தொலைபேசி எண்: சரி செய்யுமா மின்வாரியம்?
மின் தடங்கல் குறித்து புகாரளிக்கும் பிரத்யேக தொலைபேசி எண் செயல்படாததை சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரியில் கடந்த 10 நாட்களாக மின் விநியோகம் குறித்து புகார் தெரிவிக்கும் பிரத்யேக தொலைபேசி எண்ணான 1912 செயல்படவில்லை.
இதனால் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் தடங்கல், மழை, சூறைகாற்று தொடர்பாக மின்கம்பம் சாய்ந்துள்ள. மின் கம்பி அறுந்துள்ள தகவல் தொடர்பான விவரங்களை பதிவு செய்யமுடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் 1912 எண்ணை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.