தர்மபுரியில் பட்டதாரி பெண் மாயம்: தந்தை போலீசில் புகார்
தர்மபுரி யில் பட்டதாரி பெண் மாயம்: தந்தை புகார்
தர்மபுரியில் பட்டதாரி பெண் மாயமானது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி எஸ்.வி ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மகள் பவித்ரா( 23).இவர் பி.எஸ்.சி படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.நேற்று பவித்ரா கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்