தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-01-13 04:10 GMT

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 37 வயது தையல் தொழிலாளி. இவருடைய 8 வயது மகளை இரண்டு வருடங்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவரது மனைவி காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து பாலக்கோடு அனைத்து மகளிர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவில் தந்தை அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. நீதிபதி சையத் பர்கத்கத்துல்லா குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 11ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News