தருமபுரியில்அமைப்புதின கொடியேற்றுவிழா

தருமபுரியில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் அமைப்பு தின கொடியேற்றுவிழா நடைபெற்றது.

Update: 2021-09-13 10:45 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டதுணைத்தலைவர் வேலுமணி, சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 35 வது அமைப்பு தின விழாவையெட்டி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு , கொடியேற்று விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் எம். சுருளிநாதன் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வேலுமணி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் என்.ராமஜெயம், முன்னாள் மாவட்ட பொருளாளர் ஆர்.விமலன், மகளிர் துணைக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சாதனைகள் நினைவு கூறப்பட்டதுடன், அமைப்பின் எதிர்கால இலக்குகள் மற்றும் கோரிக்கைகளுக்காக ஒன்றுபட்டு போராட வேண்டிய தேவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

Tags:    

Similar News