தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் நிதி அளிப்பு
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு கொடிநாள் நிதி வழங்கி ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று டிசம்பர் 7, முன்னாள் படை வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி அவரது அலுவலகத்தில் கொடிநாள் நிதி வழங்கி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.