தர்மபுரியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தியேட்டர், நகைக் கடைகளுக்கு அபராதம்
தர்மபுரி நகரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தியேட்டர் மற்றும் நகைக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி நகரில் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார்.
அதன்படி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையில், சுகாதார அலுவலர் இளங்கோவன், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜன், ரமன சரண் ஆகியோர் தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோட்டில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி வழங்குவது போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத ஒரு சினிமா தியேட்டருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோன்று 2 நகைக் கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.