தர்மபுரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் ஆய்வு

தர்மபுரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் பார்வையாளர் பிருந்தா தேவி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-02-06 06:45 GMT

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பார்வையாளர் பிருந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நதருமபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் பார்வையாளர் பிருந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, தர்மபுரி நகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருவதை  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாபு, தர்மபுரி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சித்ரா சுகுமார் உட்பட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News