தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர் உத்தரவு

பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தருமபுரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-04-02 05:52 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் விதமாக அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தருமபுரி கலெக்டர்  கார்த்திகா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில், அனைத்து வர்த்தகம் மற்றும் வியாபார, தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135 பி -ன்படி வாக்குப்பதிவு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

அதே நேரத்தில் தேர்தல் அன்று பணிக்கு வராத பணியாளர்களின் சம்பளத்திலிருந்து எந்த பிடித்தமும் செய்யக்கூடாது. அப்படி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் அளிக்க, தருமபுரி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 9442271235, 9994799224 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News