தர்மபுரி மாவட்டத்தில் இன்று 28 பேர் கொரோனாவால் பாதிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 28 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 30 ஆம் தேதி ஒரே நாளில், 28 பேர் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 26 ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டு 25502 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 339 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 235 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் இன்று ஒரே நாளில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அதிகாரபூர்வமாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.