தர்மபுரி எஸ்.பி. அலுவலக கூடுதல் கட்டுமானப் பணிகளை காவல் தலைமை இயக்குநர் ஆய்வு
தர்மபுரி எஸ்.பி.அலுவலக கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை காவல் தலைமை இயக்குநர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலகம் பின் புறம், ரூ.5.40 கோடியில் புதிதாக கூடுதல் கட்டிட கட்டுமான பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று, தர்மபுரிக்கு வந்த காவலர் வீட்டு வசதி கழக தலைவரும், காவல் துறை டிஜிபியுமான ஏ.கே. விஸ்வநாதன், எஸ்.பி. அலுவலக கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு அறையாக சென்று, கட்டுமான விவரங்களை ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து காரிமங்க லம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாருக்கு குடியிருப்புகள் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த. ஆய்வின் போது, மாவட்ட எஸ்பி கலைச்செல்வன், பொறியாளர்கள் உடனிருந்தனர்.