தர்மபுரி மாவட்டத்தில் இன்று 133 பேருக்கு கொரோனா தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 133பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2021-06-17 15:33 GMT

தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில்  133பேருக்கு இன்று கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 046 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 21 ஆயிரத்து 107 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இன்று மட்டும் 235 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1756 பேர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.  மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 183பேர் கொரோனோவுக்கு பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News