தர்மபுரி: விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை, வரும் 21ம் தேதிக்கு தர்மபுரி நீதிமனம் ஒத்திவைத்தது.
தர்மபுரியில் கடந்த, 2015 ஆம் ஆண்டு, தே.மு.தி.க., பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமியையும் அவதுாறாக பேசியதாக, தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில், விஜயகாந்த் ஆஜராகாத நிலையில், அவரது வக்கீல் காவேரிவர்மன் ஆஜரானார். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை வரும், 21ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.