தருமபுரியில் டிச. 4ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-11-30 16:30 GMT

பைல் படம்.

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) DDU-GKY திட்டத்தின் கீழ் நடத்தும் வேலையற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04.12.2021 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மொரப்பூர் இந்து அறநிலையத்துறை திருமண மண்டபத்தில் நடைபெறும் சமய வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம்.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய, படிக்காத மற்றும் 8-ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், B.E படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண்,பொண் இருபாலரும் ) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.திவ்யதர்சினி  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News