தர்மபுரி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

Update: 2021-09-01 15:00 GMT

தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி கிராமத்தில் கொரோனோ பரிசோதனை முகாம் நடைபெற்றது

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் தற்போது 236 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 244பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும்  26 ஆயிரத்து 874 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 26 ஆயிரத்து 394 பேர் ஆகும்.

Tags:    

Similar News