தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் குறைந்தது கொரோனா தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் கொரோனா குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Update: 2022-03-20 15:30 GMT

தர்மபுரி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பரிசோதனையில் யாருக்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட 12 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 283 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.மாவட்டம் முழுவதும் இந்த தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 191 ஆகும்.குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 35 ஆயிரத்து 896பேர் என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது

Tags:    

Similar News