வள்ளல் அதியமான்-ஔவையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

சித்ரா பௌர்ணமி வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வள்ளல் அதியமான்-ஔவையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

Update: 2022-04-16 04:45 GMT

தர்மபுரியில் நடைபெற்ற வள்ளல் அதியமான் பிறந்த தின விழா

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் சித்ரா பௌர்ணமி - வள்ளல் அதியமான் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா கலந்து கொண்டு வள்ளல் அதியமான் அவர்களின் திருவுருவ சிலைக்கும், ஒளவையார் அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், கே.பி.அன்பழகன், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஏ.கோவிந்தசாமி, அரூர் எம்எல்ஏவே.சம்பத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், முன்னாள் எம்பி எம்.ஜி.சேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் சுப்பிரமணி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News