தர்மபுரியில் 10 மாத பெண் குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை
தர்மபுரியில் 10 மாத பெண் குழந்தை உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி பிடமனேரி பெருமாள் கோவில் ரோடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்,34 கூலி தொழிலாளி. இவரது மனைவி இலக்கியா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது . வெற்றிவேல், வயது 5, கீர்த்தி,வயது 3,லத்திகா (10மாதம்) என்று மூன்று குழந்தைகள் உள்ளன.
இதில் லத்திகாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து காலையில் குழந்தைக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாத போனதால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விக்னேஷ் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.