தடை செய்யப்பட்ட புகையிலை, மது விற்ற 22 பேர் கைது

Update: 2020-12-27 05:15 GMT

தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, மது விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பவர்கள், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்கள் மற்றும் சூதாடும் நபர்களை கைது செய்யக்கோரி தருமபுரி மாவட்ட எஸ்பி., பிரவேஷ் குமார், போலீசாருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட முழுவதும் உள்ள போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட புகையிலையை விற்றவர்கள் தருமபுரியில் 2 பேரும், அரூரில் 4 பேரும், பென்னாகரத்தில் 2 பேரும் மற்றும் பாலக்கோட்டில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோன்று கள்ளத்தனமாக மது விற்றவர்கள் தருமபுரியில் 6 பேரும், அரூரில் ஒருவரும் மற்றும் பென்னாகரத்தில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் 22 பேர் கள்ளத்தனமாக மது, புகையிலை விற்றதன்பேரில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News