வாகன சோதனை-அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கம்

Update: 2021-04-03 06:30 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதியில், திமுக., அதிமுக., நாம் தமிழர் கட்சி., உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதேபோன்று, அரசியில் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில், ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலில் பணம் எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க, மாவட்டம் முழுவதும், தேர்தல் பறக்கும்படை அமைத்து, தீவிர கண்காணிப்பு பணியில், ஊழியர்களை ஈடுபடுத்தி, மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

செங்கல்பட்டு, பரனுார், அச்சிறுப்பாக்கம், ஆத்துார், இருங்குன்றப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, ஆகிய சுங்கச்சாவடிகளில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் துணை ராணுவ வீரர்கள், போலீசார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று, முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன சோதனை நடந்து வருகிறது. இதனால், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News