சிவசங்கர்பாபாவுக்கு உடல்நிலை பின்னடைவு: ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்ப்பு

சிவசங்கர்பாபாவுக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

Update: 2021-06-18 12:06 GMT
சிவசங்கர் பாபா சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இண்டர்நேஸ்னல் பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் செங்கல்பட்டு கிளை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.

சிவசங்கர் பாபாவுக்கு இன்று காலை முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பிற்பகலில் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சர்க்கரை அளவு மற்றும் இரத்தக் கொதிப்பு அதிகமாக உள்ள காரணத்தினாலும்,

அவரது இதயத் துடிப்பு குறைந்து வருகின்ற காரணத்தினாலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர் இந்த நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு திடீரென உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு மோசமானது.

மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தற்போது துப்பாக்கி ஏந்திய பலத்த போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்து அவரை விசாரிக்க உள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அனைவரின் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது..

Tags:    

Similar News