செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை துவங்கியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது; முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Update: 2022-02-22 02:45 GMT

செங்கல்பட்டு மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, திருப்போரூர், பேரூராட்சி, மதுராந்தகம் நகராட்சி, கூடுவாஞ்சேரி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில்,  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, இன்று காலை கிழமை காலை 8.00 மணி முதல் எண்ணப்பட துவங்கியுள்ளன.

தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இன்று காலை 7.00 மணிக்கு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பலத்த சோதனைக்கு பின் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து கிருமிநாசினி  கொண்டு கையை சுத்தம் செய்து அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட (எல்இடி திரை முன்பு) வாக்கு எண்ணும் மையத்தில் உட்புறத்தில் அமர வைக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவின்போது வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்பட்டு வாக்குகள் அவர்கள் முன்னிலையில் துவங்கியது. முன்னதாக தபால் வாக்குப் பெட்டிகள் அந்தந்த பகுதிகளில் இருந்து அலுவலர்கள் மூலம் பத்திரமாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு தற்போது தபால் வாக்குகள் எண்ணிக்கை துவங்கியுள்ளது.

Tags:    

Similar News