செங்கல்பட்டு மாவட்டத்தில் 442 ஏரிகள் 100% நிரம்பின

தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 442 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

Update: 2021-11-13 11:00 GMT

வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், நேற்று முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் மழையின் அளவு குறைந்துள்ளது. எனினும், அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அறுகளில் வெள்ளநீர் வருவதால், ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில்,  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளன. இதில், 442 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 75 சதவீதத்துக்கு மேல் 81 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 3, எரிகளும், 25 சதவிகிதத்துக்கு மேல் 2 ஏரிகளும் நிரம்பி உள்ளன. தொடர்ந்து ஏரிகளின் நீர்வரத்தை கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பிலும், நீர்வள ஆதாரத்துறை சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News