செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,279 பேருக்கு கொரோனா : 20 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ,இன்று ஒரே நாளில் 2,279 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 20 பேர் இறந்தனர்.

Update: 2021-05-09 14:45 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 2,279 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 964-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று 1,629பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேரில் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 419 ஆக உள்ளது.

சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1052-ஆக உயர்ந்தது. இதில் 97ஆயிரத்து 395 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News