செங்கல்பட்டு: ஏழைகளுக்கு, மணல் லாரி உரிமையாளர்கள் நலத்திட்ட உதவி!
சிங்கபெருமாள் கோவிலில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் கொரொனா ஊரடங்கு காராணமாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள், 150க்கும் மேற்பட்டோருக்கு தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மாநில செயலாளர் காதர்மொய்தீன் தலைமையில், அரிசி, காய்கறி, மளிகை பொருட்களை செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.