குடிபோதையில் சித்தப்பாவை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது

குடிபோதையில் சித்தப்பாவை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் மகனை போலீஸார் கைது செய்தனர்

Update: 2022-02-28 01:30 GMT

செங்கல்பட்டு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் நேற்று இரவு குடிபோதையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் மண்டகொளத்தூர் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்தவர் குட்டியப்பன் அவருடைய மகன் ராமதாஸ், மற்றும் அதே பகுதியச் சேர்ந்த  முனியப்பா என்பவரின் மகன் குமார்.  குமார் மற்றும் அவரது அண்ணன் மகன் ராமதாஸ் இருவரும் செங்கல்பட்டில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் கடந்த இரு தினங்களாக வாடகை வீடு ஒன்றில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகின்றனர்.

தங்கியிருந்த இடத்தில் நேற்று இரவு இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும் ஏற்பட்ட வாய் தகராறில் ராமதாஸ் அவரது சித்தப்பா குமார் என்பவரை வயிறு மற்றும் கை பகுதியில், சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் குத்திஉள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே குமார் பலியானார். இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராமதாசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News