நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய குற்றவாளிகள் கைது

செங்கல்பட்டில் நன்னடத்தை உத்தரவாதத்தை மீறிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-05-07 04:15 GMT

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காஞ்சிபுரம் பல்லவன் நகரைச் சோ்ந்த சந்தோஷ்குமார் (33) மற்றும் செங்கல்பட்டு முதலியார் தெருவைச் சேர்ந்த சார்லஸ் அகஸ்டின் (33) ஆகிய இரண்டு போ் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. சந்தோஷ்குமார்‌ மீது மூன்று கொலை வழக்குகள்‌, இரண்டு கொலை முயற்சி வழக்குகள்‌ உட்பட பதிமூன்று வழக்குகளும்‌, சார்லஸ்‌ அகஸ்டின்‌ என்பவர்‌ மீது இரண்டு கொலை வழக்குகள்‌, இரண்டு கொலை முயற்சி வழக்குகள்‌ உட்பட பதினாறு வழக்குகளும்‌ நிலுவையில்‌ உள்ளது.

இருவரும், 'எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டோம்' என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நன்னடத்தை பிணைய பத்திரத்தில் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி கையெழுத்திட்டனா். இதன்பிறகு, கடந்த 16 செங்கல்பட்டு நத்தம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (54) என்பவரை கத்தியை காட்டி ரூ50 ஆயிரத்தை பறித்துச் சென்றுள்ளனர்

இது குறித்து செங்கல்பட்டு உட்கோட்ட நிர்வாகத்துறை அலுவலர் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தோஷ்குமார்‌ மற்றும்‌ சார்லஸ்‌ அகஸ்டின்‌ ஆகிய இருவரையும்‌ கைது செய்து சிறையில்‌ அடைத்தனர்.

Tags:    

Similar News