நந்தினி பால் விலை உயர்வு இன்று முதல் அமல்

ஒரு லிட்டர் பால் விலை ரூ.42இல் இருந்து ரூ.44 ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.22இல் இருந்து ரூ.24 ஆகவும் உயர்ந்துள்ளது.

Update: 2024-06-26 04:00 GMT

கர்நாடக அரசு எரிபொருள் மீதான விற்பனை வரியை உயர்த்திய சில நாட்களுக்குப் பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3.5 ரூபாயும் உயர்ந்துள்ளது. தற்போது பால் விலையும் அதிகரித்துள்ளது.

அமுல், மதர் டெய்ரிக்கு பிறகு தற்போது நந்தினி பால் விலையும் அதிகரித்துள்ளது. தென்னிந்தியாவின் கூட்டுறவு பால் மகாமண்டலமாக செயல்பட்டு வருகிறது.

27 இலட்சத்திற்கும் அதிகமான பால் பண்ணையாளர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து, அதன் உறுப்பு பால் சங்கங்கள் மூலம் பால் பதப்படுத்தி வருகிறது. தற்போது அறுவடை காலம் என்பதால் அனைத்து மாவட்ட பால் ஒன்றியங்களிலும் பால் சேமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தற்போது ஒரு கோடி லிட்டரை நெருங்குகிறது.

இந்த ஒரு கோடி லிட்டர் பாலையும் நந்தினி பால் நிறுவனம் முறையாக பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து முறைப்படி விநியோகித்து வருகிறது. கர்நாடகாவில் மட்டுமல்ல... தென்னிந்தியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக நந்தினி பால் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பால் விலையை இந்நிறுவனம் திடீரென உயர்த்தி உள்ளது. ஒரு லிட்டர் பால் விலை ரூ.42இல் இருந்து ரூ.44 ஆகவும் அரை லிட்டர் பால் ரூ.22இல் இருந்து ரூ.24 ஆகவும் உயர்ந்துள்ளது. விற்பனை விலை உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட விவரங்கள் வெளியாகவில்லை. இதன் மூலம் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது. விவசாயிகளும் கூடுதல் பால் உயர்வின் மூலம் கிடைக்கும் லாபத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News